உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முளைப்பாரி திருவிழா

முளைப்பாரி திருவிழா

சிவகங்கை : சிவகங்கை அருகே தச்சன்புதுப்பட்டி வல்லநாட்டுக் கருப்பர், தச்சன்காளியம்மன் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் முளைப்பாரி திருவிழா நடந்தது.இக்கோயிலில் திருவிழா கடந்த ஆக.13ல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் இரவில் கருப்பர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பெண்கள் கும்மி கொட்டி வழிபட்டனர். திங்கள்கிழமை மாலை கிராம மக்கள் தங்களது நேர்த்தி முளைப்பாரிகளை ஊரின் மந்தைக்கூடத்தில் வைத்து கும்மி கொட்டி வழிபட்டனர். நேற்று காலை மந்தையில் இருந்து மேள தாளங்கள் முழங்க முளைப்பாரிகளை பெண்கள் தலையில் சுமந்து கோயிலருகே உள்ள ஊருணியில் கரைத்தனர். தொடர்ந்து கருப்பர் மற்றும் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை