உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் வயல்களில் பன்றிகள் தொல்லை

நெல் வயல்களில் பன்றிகள் தொல்லை

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பீசர்பட்டினம், கால்பிரபு, இடைக்காட்டூர், முத்தனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் கிணற்று பாசனத்தை நம்பி விவசாயத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். தற்போது கிணறுகளில் ஓரளவிற்கு தண்ணீர் இருப்பதால் கோடை விவசாயம் செய்துள்ளனர்.நெற்பயிர்களில் பால் பிடிக்கும் நிலையில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் நெல் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ