உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / பழைய குற்றாலம் அருவியில் கூடுதல் நேரம் குளிக்க அனுமதி

பழைய குற்றாலம் அருவியில் கூடுதல் நேரம் குளிக்க அனுமதி

குற்றாலம்:பழைய குற்றாலத்தில் கூடுதலாக இரண்டு மணி நேரம் குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.தென்காசி மாவட்டம், பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணியர் குளிக்க, காலை ௬:00 முதல் மாலை ௬:00 மணி வரை மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நேரத்தை நீட்டிக்க வேண்டும் என வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், காலை ௬:00 முதல், இரவு ௮:00 மணி வரை சுற்றுலா பயணியர் குளிக்க, தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி, உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.இதற்கான உத்தரவை, கலெக்டர் கமல் கிஷோர் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி