உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / அத்துமீறி விசாரணை: எஸ்.ஐ., மாற்றம்

அத்துமீறி விசாரணை: எஸ்.ஐ., மாற்றம்

தென்காசி:கணவர் மீது புகார் கொடுத்த பெண்ணிடம் அடிக்கடி விசாரணை நடத்திய எஸ்.ஐ., ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.தென்காசி மாவட்டம் புளியரையை சேர்ந்தவர் மகாலிங்கம் 58. இவர் ஆழ்வார்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. யாக பணியாற்றி வருகிறார்.ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த ஒரு பெண் தமது கணவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஓராண்டுக்கு முன்பு செய்த புகார் குறித்து விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று எஸ்.ஐ., மகாலிங்கம் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி தென்காசி எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி