உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பஞ்சவன்மாதேவி கோவிலில் கிணற்றின் மேற்சுவர் கண்டுபிடிப்பு

பஞ்சவன்மாதேவி கோவிலில் கிணற்றின் மேற்சுவர் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் ராஜராஜ சோழனின், பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளி படைகோவிலாகும்.நேற்று பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலை பள்ளியை சேர்ந்த 54 மாணவர்கள், தலைமையாசிரியை ஹேமலதா தலைமையில் கோவிலில் உழவாரப் பணி மேற்கொண்டனர்.அப்போது, வலது புறத்தில், 5 மீட்டர் சுற்றளவு கொண்ட பழங்காலத்து கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கிணற்றின் மேற்புற சுற்று சுவரை கண்டுபிடித்தனர். அதை, 1 அடி ஆழத்திற்கு தோண்டி பார்த்தபோது, கிணறு இருப்பதற்கான தடம் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை