உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாணவருக்கு தொந்தரவு: விடுதி காப்பாளர் கைது

மாணவருக்கு தொந்தரவு: விடுதி காப்பாளர் கைது

கடமலைக்குண்டு:தேனி மாவட்டம் வருஷநாடு அருகே பள்ளி மாணவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு விடுதி காப்பாளர் ராமச்சந்திரனை 45, போலீசார் கைது செய்தனர்.வருஷநாடு பகுதியை சேர்ந்த 14 வயது மாணவர், மயிலாடும்பாறை ஆதிதிராவிடர் நலத்துறை விடுதியில் தங்கி அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். அம்மாணவருக்கு விடுதி காப்பாளர் ராமச்சந்திரன் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மாணவர் தந்தையிடம் கூறியுள்ளார். மயிலாடும்பாறை போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றனர். அவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை