உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது

 ஆசிரியைக்கு தொந்தரவு ஆசிரியர் கைது

சின்னமனுார்: ஆரிசியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம், சின்னமனுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிச்செல்வம், 40; தனியார் பள்ளி ஆசிரியர். போடி பகுதி நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக ஒருவர் பணியாற்றி வருகிறார். இருவரும் தேனியில் நடந்த பயிற்சிக்கு சென்ற போது, ஆசிரியையிடம் மாரிச்செல்வம் அறிமுகமானார். இந்த நட்பை பயன்படுத்தி, அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் நட்பை ஆசிரியை முறித்துக்கொண்டார். ஆத்திரமடைந்த மாரிச்செல்வம், ஆசிரியை பற்றி அவதுாறு செய்தி வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் அவர் தேனி எஸ்.பி. சினேகபிரியாவிடம் புகார் அளித்தார். தொடர்ந்து, சின்னமனுார் போலீசார் மாரிச்செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை