உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மானூரில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

மானூரில் இன்று மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

திருநெல்வேலி : மானூரில் இன்று (14ம் தேதி) மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி 80 சதவீதம் செயல் திறனற்ற மாற்றுத் திறனாளிகளை கண்டறியும் வகையில் இன்று (14ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மானூர் பஞ்.,யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.இம்முகாமில் மானூர் பஞ்.,யூனியனுக்கு உட்பட்ட அனைத்து பஞ்.,களையும் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவ முகாமிற்கு வரும் போது ரேஷன் கார்டு அசல், நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை