உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேட்டில் உள்ள செங்கல் சூளையில், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன், 28, பணிபுரிந்து வருகிறார்.இவர் இதே பகுதியில், மனைவி கலாவதி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த, இவரது 2 வயது ஆண்குழந்தை சிரியான், அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.இதைக் கண்ட கலாவதி, உடனடியாக குழந்தையை மீட்டு, பாடியநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு, குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை