உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்

கூவம் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் அமைந்துள்ளது திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில். இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் விநாயகர் உற்சவம் நடந்தது. திருவிழா காலங்களில் தினமும் காலை 8:00 மணி மற்றும் இரவு 7:00 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.வரும் 20ம் தேதி காலை 7:30 மணி முதல் 9:00 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். 21ல் திருக்கல்யான வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை