உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,ல் மாணவர் சேர்க்கை, வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-- -25ம் கல்வியாண்டிற்க்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை தற்போது மேலும் 16 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் வரும் 31 வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம்.இதில் எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு பயிற்சியில் சேர்ந்து உடனடி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.இலவச மிதிவண்டி, காலணிகள், பாடப்புத்தகம், வரைபட உபகரணம், சீருடை மற்றும் தையற் கூலி; மாதாந்திர உதவித்தொகையாக 750 ரூபாய், புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் என்ற முகவரியில் நேரிலோ, gmail.comஎன்ற இமெயில் மற்றும் 94442 24363, 94869 39263 94441 39373 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ