உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாலிபரிடம் பணம் பறிப்பு 2 பேருக்கு வலை

வாலிபரிடம் பணம் பறிப்பு 2 பேருக்கு வலை

திருத்தணி: திருத்தணி தாலுகா, சந்தானகோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 27. இவர் நேற்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் திருத்தணி நகருக்கு வந்தார். திருத்தணி - -நாகாலாபுரம் மாநில நெடுஞ்சாலை தாழவேடு பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, பின்னால் 'ஹெல்மேட்' அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென விக்னேஷ் வாகனத்தை நிறுத்தினர். பின், ஓஜிகுப்பம் கிராமத்திற்கு எப்படி செல்ல வேண்டும் என ஒருவர், விக்னேஷிடம் கேட்கும் போது, மற்றொருவர் திடீரென அவரிடம் மொபைல் போன் மற்றும் 1,300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்