| ADDED : மே 29, 2024 06:30 AM
குரோம்பேட்டை, : தாம்பரம் சானடோரியம், துர்கா நகரைச் சேர்ந்தவர் முகமது யாஷிம், 50. மின்ட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம், போதையில் இருந்த முகமது யாஷிம், இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.இதில், பலத்த காயமடைந்தவரை உறவினர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில், முகமது யாஷிம் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி, 62. பஞ்செட்டியில் உள்ள ஜே.சி.பி., பழுது பார்க்கும் மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், பணியில் இருந்தபோது அவர் மயங்கி விழுந்து சுயநினைவு இழந்தார். பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்ததாக தெரிவித்தனர்.மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.