உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில் நிலையத்தில் இரு சடலம் மீட்பு

ரயில் நிலையத்தில் இரு சடலம் மீட்பு

திருவாலங்காடு:திருவள்ளூர் அடுத்த மணவூர் ரயில் நிலைய நடைமேடையில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் இருப்பதாக, ரயில் பயணியர் அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சென்று சடலத்தை மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல், அரக்கோணம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இறந்த நிலையில் இருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தையும் ரயில்வே போலீசார் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதியவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை