உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்ணுக்கு கத்திக்குத்து 2வது கணவருக்கு வலை

பெண்ணுக்கு கத்திக்குத்து 2வது கணவருக்கு வலை

வேப்பேரி : புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர் அமலா, 38. இவரது கணவர் அய்யனார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இருவரும் பிரிந்தனர்.அதன் பின் கிஷோர்குமார் என்பவரை, அமலா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடன், 10 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அமலா கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து, வீட்டை விட்டு அவரை வெளியேற்றி விட்டார். இதையடுத்து, கிஷோர்குமார் அடிக்கடி மது அருந்தி வந்து, தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு அமலாவின் வீட்டிற்கு வந்த கிஷோர், உறவினர்களான ஜானகி, யோகேஸ்வரி முன்னிலையில் மனைவியை கத்தியால் கை மணிக்கட்டிலும், முதுகிலும் குத்தி தப்பிச் சென்றார்.பலத்த காயமடைந்த அமலாவை, உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வேப்பேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி