மேலும் செய்திகள்
நரிக்குறவர்கள் ஆர்ப்பாட்டம்
5 minutes ago
பிச்சாட்டூர் ஏரியில் தண்ணீர் நிறுத்தம்
6 minutes ago
இன்றைய மின் தடை:திருவள்ளூர்
7 minutes ago
விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அவதி
10 minutes ago
திருத்தணி: திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். திருத்தணி - சோளிங்கர் நெடுஞ்சாலையில், அகூர், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், சமத்துவபுரம், கிருஷ்ணாகுப்பம் மற்றும் ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில், 25க்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகல்ளை தவிர்ப்பதற்கு, நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்து பராமரித்து வருகின்றனர். இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் உள்ளதை அறியும் வகையில் வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் தீட்ட வேண்டும். ஆனால் நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி பராமரிக்காததால் பெரும்பாலான வேகத்தடைகளில் வர்ணம் அழிந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து, தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகளவில் வேகத்தடையில் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, வேகத்தடைகளுக்கு வர்ணம் தீட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
5 minutes ago
6 minutes ago
7 minutes ago
10 minutes ago