உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  கடலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

 கடலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் விமரிசை

திருத்தணி: தாடூர் கடலீஸ்வரர் கோவிலில் நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசித்தனர். திருத்தணி அடுத்த தாடூர் கிராமத்தில் உள்ள யோகீஸ்வரி சமேத கடலீஸ்வரர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. நேற்று கோவில் வளாகத்தில் உற்சவர்கள் யோகீஸ்வரி- கடலீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் வேத விற்பனர்கள் மந்திரங்கள் ஓத கடலீஸ்வரர்-யோகீஸ்வரி அம்மையாருக்கு திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராம பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை