உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளஸ் 2 தேர்வில் சாதனை பிளஸ் 1லும் தொடருமா?

பிளஸ் 2 தேர்வில் சாதனை பிளஸ் 1லும் தொடருமா?

உடுமலை;நடப்பாண்டு பிளஸ் 2வில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வு முடிவில் முதலிடத்தை மீண்டும் பெற்று சாதனை படைக்குமா என்பது இன்று காலை தெரியும்.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வை, 221 மேல்நிலைப்பள்ளிகளைச்சேர்ந்த, 12 ஆயிரத்து, 219 மாணவர், 14 ஆயிரத்து, 190 மாணவியர் என மொத்தம், 26 ஆயிரத்து, 409 பேர் மற்றும் 111 தனித்தேர்வர், 331 அரியர் மாணவர்கள் என மொத்தம், 26 ஆயிரத்து, 851 பேர் தேர்வெழுதினர்.இன்று காலை, 9:30க்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது. பிளஸ் 1 தேர்வு முடிவுகளை பொறுத்தவரை, கொரோனாவுக்கு முன், 2018, 2019 இரண்டு ஆண்டுகளும் மாநிலத்தில் திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றது.கடந்த 2020ல், மூன்று இடங்கள் பின்தங்கி, ஐந்தாமிடத்தை எட்டியது திருப்பூர் ; 2021ல் 'ஆல் பாஸ்'.கடந்த, 2022ல் பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில், 11வது இடம் பெற்ற திருப்பூர், கடந்தாண்டு, 96.83 சதவீத தேர்ச்சியுடன், பத்து இடங்கள் முன்னேறி, மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது.நடப்பாண்டு பிளஸ் 2வில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வு முடிவில் முதலிடத்தை மீண்டும் பெற்று சாதனை படைக்குமா என்பது இன்று காலை தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !