உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில ஹாக்கிப்போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில ஹாக்கிப்போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

உடுமலை : மாநில அளவிலான ஹாக்கிப்போட்டியில் விளையாட, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைபள்ளி, ஹாக்கி அணியினர் குறுமையம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளை பதிவு செய்துள்ளனர். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், தன்னார்வலர்கள் சீருடை உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில், ராணிபேட்டை மாவட்டத்தில், மாநில அளவிலான சப் - ஜீனியர் ஹாக்கிப்போட்டி ஆக., 15 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.இப்போட்டியில், திருப்பூர் மாவட்ட அணியின் சார்பில் விளையாடும் வீரர்களில், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் தேர்வாகியுள்ளனர்.மாநில அளவிலான போட்டியில் விளையாடுவதற்கு, திவாகர், தருண்ராஜ், யோகேஸ்வரன், சசிதரூண், பொன்ராஜ், சித்தார்த்தன், ேஹமபிரசாத் உள்ளிட்ட மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.போட்டியில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரவேல், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி