| ADDED : ஆக 20, 2024 11:01 PM
திருப்பூர்;'வனத்துக்குள் திருப்பூர் - 10' மற்றும் களம் அறக்கட்டளை சார்பில், கருமாபாளையத்தில், 200 மரக்கன்றுகள் நடப்பட்டது. 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், வானம் பார்த்த தரிசு நிலங்களை எல்லாம், சமூக காடுகளாக மாற்ற வேண்டும் என, வெற்றி அமைப்பும், பல்வேறு பசுமை அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர்.விவசாயிகள், நீடித்த நிலையான வருவாய் பெரும் ஆர்வத்துடன், மரம் வளர்ப்பை விரும்பி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவிநாசி களம் அறக்கட்டளை மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழு சார்பில், அவிநாசி பகுதியில் நேற்று முன்தினம் மரக்கன்றுகள் நடப்பட்டன.அவ்வகையில், அவிநாசி அருகே கருமாபாளையம் பகுதியில் உள்ள பழனியப்பா பார்க் பகுதியில், 170 மகிழம், 30 நெட்டிலிங்கம் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் - 10' திட்டத்தில், 1.11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மரக்கன்று நட்டு வளர்க்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இலவசமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். --------------------------கருமாபாளையம், பழனியப்பா பார்க் வளாகத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் - 10' திட்டத்தின், மரக்கன்று நடும் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.