திருப்பூர், : காங்கயம், காடையூர், விவேகானந்தா அகாடமி, சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி மாணவி தேஷ்மிதா, 500க்கு, 483 மதிப்பெண் பெற்று முதலிடம். லக் ஷனா, 500க்கு, 482 பெற்று, 2வது இடம், மிதுனா, 500க்கு, 480 மதிப்பெண் பெற்று, 3வது இடம். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலில், 65 க்கு மேற்பட்ட மாணவர், 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணும், 58 க்கு மேற்பட்ட மாணவர்கள், 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர்.தமிழ், சமூகஅறிவியலில் தலா, ஒன்பது மாணவர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். சாதனை படைத்த மாணவர், மாணவியர்,உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி நிர்வாக தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்ரமணியம், பொருளாளர் ராஜன், பள்ளி முதல்வர் பத்மநாபன் உள்ளிட்டோர் பாராட்டினர். பிளஸ் 2விலும் சாதனை
இப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில், தொடர்ச்சியாக, 9வது முறையாக, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாணவர் தரணீஷ், 476 மதிப்பெண் பெற்று முதலிடம், வணிகவியில் பிரிவில் லக் ஷிதா, 488 பெற்று முதலிடம் பெற்றனர். ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்,வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் பொருளாதார பாடங்களில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், 90 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.