உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை

பள்ளி மாணவ, மாணவியர் பெற்றோருக்கு பாத பூஜை

திருப்பூர் ; குளத்துப்பாளையம் ஸ்ரீசத்ய சாய் சேவா சமிதி சார்பில், பாலவிகாஸ் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை நடத்தும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை முதல் ஓம்காரம், சுப்ரபாதம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியன நடந்தன. ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பின் நிர்வாகிகள், கல்வி மற்றும் இளைஞர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் 32 பெற்றோர்கள், 36 குழந்தைகள், முன்னாள் பால விகாஸ் மாணவர்கள் மற்றும் சமிதி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளை ஆசிர்வதித்தனர். குரு சீதாலட்சுமி நன்றி கூறினார். மங்கள ஆரத்தி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை