உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண்ணை கொலை செய்த ஆசாமி க்கு குண்டாஸ்

பெண்ணை கொலை செய்த ஆசாமி க்கு குண்டாஸ்

திருப்பூர்;பெண்ணை கொலை செய்த ஆசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருப்பூர் பாரப்பாளையத்தில் கடந்த நவ., மாதம், மணியம்மாள் என்பவரை கொலை செய்து, நகைகள் திருடப்பட்டது. இது தொடர்பாக ராஜீவ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார், 39 என்பவர் கைது செய்யப்பட்டர். தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல் சிறையில் உள்ள செந்தில்குமாருக்கு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை