உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / துாக்கத்தில் ஓட்டியதால் விபத்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்

துாக்கத்தில் ஓட்டியதால் விபத்து இறைச்சி கடைக்குள் புகுந்த கார்

வேலுார்:வேலுார் அடுத்த பென்னாத்துாரை சேர்ந்தவர் முபாரக் 35. இவர் மனைவி சாயிஷா 30. இவர் அப்பகுதியில் கோழி கறிக்கடை நடத்துகிறார். நேற்று காலை கடையில் இருந்தபோது திடீரென கார் கடைக்குள் புகுந்தது. இதில் கடை சுவர் இடிந்து விழுந்ததில் சாயிஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.வேலுார் தாலுகா போலீசார் விசாரணையில்சித்தேரியை சேர்ந்த கார்த்திக் 37 என்பவர் பென்னாத்துார் வழியாக வேலுார் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவர் துாக்கத்தில் காரை ஓட்டி சென்றபோது அங்கிருந்த வேகத்தடையை கவனிக்காமல் ஓட்டியதால் கார் நிலை தடுமாறி கோழிக்கறி கடைக்குள் புகுந்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி