உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நர்சிங் கல்லுாரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த கண்டாச்சிபுரம், ஆ.கூடலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் அனிதா, 19; மணலுார்பேட்டையில் தனியார் நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார்.கடந்த 27ம் தேதி காலை, வீட்டிலிருந்து துணி கடைக்குச் செல்வதாக கூறிச்சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அனிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை