மேலும் செய்திகள்
தலை மறைவு குற்றவாளி கைது
8 hour(s) ago
வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம்
8 hour(s) ago
புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய இருவர் கைது
8 hour(s) ago
விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம், காணை அடுத்த ஆ.கூடலுார் கிராமத்தில், 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்தபோது, அங்குள்ள அரசு துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், அந்த கிராம வி.ஏ.ஓ.,வான, விழுப்புரத்தை சேர்ந்த சாந்தி, 40, பணியில் இருந்தார். இரவு ஓட்டுப்பதிவு முடிந்து, 8.30 மணிக்கு, மின்னணு இயந்திரங்களை அனுப்பி வைக்க ஓட்டுச்சாவடி அலுவலர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு, வி.ஏ.ஓ., சாந்தி, ஹோட்டலில் இருந்து, டிபன் வாங்கி வந்து கொடுத்தார்.அப்போது, ஓட்டுச்சாவடிக்கு வந்த, தி.மு.க., மாவட்ட கவுன்சிலரான, ஆ.கூடலுாரை சேர்ந்த ராஜிவ்காந்தி, 45, 'ஹோட்டலில், நான் வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலங்களை நீ வாங்கி வந்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கொடுத்து விட்டாயா...' என கூறி, வி.ஏ.ஓ., சாந்தியிடம் தகராறு செய்து, அவரின் கன்னத்தில் அறைந்தார். பின், வீட்டிலிருந்து போதையில் வந்த அவர், மீண்டும் வி.ஏ.ஓ., சாந்தியிடம் தகராறு செய்து, அவரின் மொபைல் போனை பறித்துச்சென்றார்.பாதிக்கப்பட்ட சாந்தி, ஓட்டுச்சாவடியில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார். பெண்கள் மீதான வன்கொடுமை, அரசு பணி செய்ய விடாமல் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி, 45, அவரது தந்தை ராஜேந்திரன், 62, ஆகியோர் மீது காணை போலீசார் வழக்கு பதிந்தனர்.இந்நிலையில் நேற்று காலை, ராஜிவ்காந்தியை காணை போலீசார் கைது செய்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago