உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

விக்கிரவாண்டி : தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.விக்கிரவாண்டி அடுத்த தொரவி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் காஞ்சனா தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் செல்லையா முன்னிலை வகித்தார். அனைத்து வீதிகளிலும் சென்று மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.பள்ளி ஆசிரியர்கள் சண்முகம், நாகராணி, அனுசுயா, சந்திரா, ஜீவா, புஷ்பவள்ளி, பெமினா, புனிதா உட்பட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை