உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மழையால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு

மழையால் பாதித்த நெற்பயிர்கள் வேளாண்மை அலுவலர்கள் ஆய்வு

வானுார : காயல்மேடு பகுதியில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 8ம் தேதி இரவு பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. வானுார் அடுத்த கிளியனுார் பகுதியில் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.கிளியனுார், கொஞ்சிமங்கலம், எடச்சேரி, கிளாப்பாக்கம், வங்காரம், காயல்மேடு, தலக்காணிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா பருவ அறுவடைக்கு தயாரான 3,750 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.இப்பகுதிகளை நேற்று வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர், உதவி வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்கள், ஆத்மா அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி