உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது போதையில் தகராறு: மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் கைது

மது போதையில் தகராறு: மகனை அடித்துக் கொன்ற பெற்றோர் கைது

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் ஆலங்குளத்தில் மகன் அய்யனாரை 20, அடித்து கொலை செய்த தாய் பேச்சியம்மாள், தந்தை சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் அய்யனார். கட்டடக் கூலி தொழிலாளி நேற்று காலை இவரது வீட்டில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.அய்யனார் உடலில் காயங்கள் இருந்ததால் போலீசார் தந்தை சுப்பிரமணியனிடமும் தாயார் பேச்சியம்மாளிடம் விசாரித்தனர்.விசாரணையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான அய்யனார் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தாய் தந்தையரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினமும் இரவு மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் சுப்பிரமணியனிடமும் பேச்சியம்மாளிடமும் தகராறு செய்தார். ஆத்திரமடைந்த இருவரும் மகனை அடித்து உதைத்தனர்.இதில் படுகாயம் அடைந்த அய்யனார் மயங்கினார். சுப்பிரமணியனும் பேச்சியம்மாளும் மதுபோதையில் மகன் உறங்குகிறான் என நினைத்து அப்படியே விட்டு விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மகன் இறந்து போனது தெரிய வந்தது என அவர்கள் போலீசாரிடம் கூறினர்.இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் சுப்பிரமணியன், பேச்சியம்மாளை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை