உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சென்டர் மீடியனையொட்டி சேதமான ரோடு

சென்டர் மீடியனையொட்டி சேதமான ரோடு

சிவகாசி : சிவகாசி ஜக்கம்மாள் கோயில் அருகே சென்டர் மீடியனை ஒட்டி சேதமடைந்த ரோட்டினால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி வகுக்கிறது.சிவகாசி ஜக்கம்மாள் கோயிலில் இருந்து மணி நகர் முக்கு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை செல்லும் ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறுகலாக இருந்த ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் ரோடு மிகவும் குறுகிவிட்டது. பஸ் ஸ்டாண்ட் செல்வதற்கு மட்டுமின்றி இப்பகுதியில் அரசு பள்ளிகளும் இருப்பதால் எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும்.இந்நிலையில் ஜக்கம்மாள் கோயில் அருகே ரோடு சேதம் அடைந்து மிகப்பெரிய பள்ளமாக உள்ளது. குறுகிய ரோட்டில் பெரிய பள்ளம் இருப்பதால் டூவீலர் உட்பட எந்த வாகனமும் எளிதில் செல்ல முடியவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுவதோடு விபத்தும் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி