உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூதாட்டியிடம் நகை பறிப்பு 

மூதாட்டியிடம் நகை பறிப்பு 

விருதுநகர்: விருதுநகர் திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் கோதையாண்டாள் 72. இவரது கணவர் கண்ணன் பி.எஸ்.என்.எல்.,ல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன், மகள்கள் திருமணமாகி வெளியூர், வெளிநாட்டில் வசிக்கின்றனர். கணவர் நேற்று முன்தினம் திருச்சியில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 6:00 மணிக்கு கோதையாண்டாள்வாசல் தெளிக்க பெருக்கி கொண்டிருந்த போது டூவீலரில் வந்த இருவர் எதிர்பாராத நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்க சங்கலி, மாங்கல்யம் ஆகியவற்றை பறித்து சென்றனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை