உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

மனைவியை தாக்கிய கணவர் கைதுவிருதுநகர்: ஆதிபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி 36. இவர் ஜூன் 19 இரவு 9:30 மணிக்கு மது குடித்து வீட்டிற்கு வந்து மனைவி பாண்டியம்மாளை தாக்கியதில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வச்சக்காரப்பட்டி போலீசார் கணவரை கைது செய்தனர்.பள்ளி மாணவி மாயம்விருதுநகர்: பள்ளிக்கூடத்தெருவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி 15. இவருக்கு ஜூன் 20 ல் வயிற்று வலி ஏற்பட்டு பள்ளிக்கு செல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின் உடல்நிலை சீரானதால் மாலை 6:30 மணிக்கு டியூசன் செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைவிருதுநகர்: முத்தால் நகர் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் சூர்யா 25. இவர் கொத்தனார் வேலை செய்கிறார். இவர் ஜூன் 20 இரவு 10:30 மணிக்கு மது குடித்து விட்டு வீட்டில் இருப்பவர்களுடன் தகராறு செய்தார். அதிகாலை 12:15 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.அடையாளம் தெரியாத உடல்விருதுநகர்: விருதுநகர் - சிவகாசி ரோட்டில் ஜூன் 21 காலை 6:15 மணிக்கு 30 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.தம்பதிக்கு கொலை மிரட்டல்சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சுக்கிரவர் பட்டி ரோடு பராசக்தி காலனியை சேர்ந்தவர் கவுசல்யா 23. இவரது கணவர் மகேஷ் குமார். இருவரும் தங்களது வீட்டில் தனிமையில் இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கணேஷ் மூர்த்தி 21, தனது அலைபேசியில் வீடியோ எடுத்தார். இருவரும் சென்று கணேச மூர்த்தியிடம் அலைபேசியில் எடுத்த வீடியோவை அளிக்குமாறு கூறியதற்கு, கணேசமூர்த்தி அவர்களை தகாத வார்த்தை பேசி அரிவாளால் தாக்க முயன்றார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீஸ்காரர் மீது தாக்குதல்சிவகாசி: மாரனேரி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் பாலமுருகன். அம்மா பட்டியைச் சேர்ந்த உமாநாத் 38. இவர் மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள டாக்டர், செவிலியரிடம் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். விசாரிக்க வந்த பாலமுருகனை தகாத வார்த்தை பேசி சட்டையை பிடித்து அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். மாரனேரி போலீசார் உமாநாத்தை கைது செய்தனர்.விபத்தில் மூன்று பேர் காயம்சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சிறுவர் பூங்கா தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள் 65. இவர் தனது 12 வயது பேத்தியுடன் திருத்தங்கல் குறுக்குப் பாதை அருகே ரோட்டில் நடந்து சென்ற போது, தனது நண்பர் கவுதமை ஏற்றிக் கொண்டு டூவீலர் ஒட்டி வந்த இளையராஜா 27, மோதியதில் பேச்சியம்மாள், சிறுமி, கவுதம் காயம் அடைந்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைதுசாத்துார்: தாயில்பட்டியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து, 21, கார்த்திக்குமார், 22. இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு அருகில் கஞ்சா விற்றனர். அவர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.* சாத்துார் அமீர் பாளையத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன், 48. எத்தல் ஹார்வி ரோட்டில் கஞ்சா விற்றார். அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ