உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விதை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

விதை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குநர் வனஜா செய்திக்குறிப்பு: புதிய ரக விதைகளுக்கு விதைச்சான்று, அங்ககச்சான்றளிப்புத் துறை இயக்குனர் வழங்கும் பதிவுறுச்சான்று பெற்றிருக்க வேண்டும். பதிவுறுச்சான்று நகல், முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பகுதிக்கும், பருவத்திற்கும் உகந்த விதைகளை மட்டும் விற்பனை செய்ய வேண்டும்.புதிய விதை உரிமம் பெறுவதற்கும், உரிமம் புதுப்பித்தலுக்கும் தங்கள் பகுதியில் உள்ள விதை ஆய்வாளர்களை அனுகி seed certification. tn.gov.inஎன்ற இணையதளத்தில் முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி