உள்ளூர் செய்திகள்

 போலீஸ் செய்தி

வாலிபர் மாயம் சாத்துார்: சாத்துார் சுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன் , 25. நவ.23 வீட்டிற்கு வந்த நண்பர் பாலு உடன் சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப்பிற்கு சென்றவர் மாயமானார் . வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். முதியவர் தற்கொலை சாத்துார் : சாத்துார் புதுப் பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பா, 70. குடும்பத்தினரை பிரிந்து வந்து தனியாக வசித்து வந்தார். நவ.23 ல் வீட்டிற்குள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர். பெண் மாயம் சாத்துார்: சாத்துார் வெள்ளக்கரை ரோட்டை சேர்ந்தவர் மூர்த்தி, 62. இவர் மகள் கற்பகவள்ளி, 20. சலவை தொழிலாளி . நவ. 20 வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மாயமானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை