உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாத்திமா நகரில் தடுப்பணை : வார்டு காங்., வேட்பாளர்

பாத்திமா நகரில் தடுப்பணை : வார்டு காங்., வேட்பாளர்

விருதுநகர் : ''மயை காலத்தில் பாத்திமா நகர் பகுதியில் தண்ணீர் புகுந்து விடுவதை தடுக்க, தடுப்பணை கட்டி தருவேன்,'' என, விருதுநகர் நகராட்சி 23 வார்டு காங்., வேட்பாளர் வெயிலுமுத்து கூறினார். வெயிலுமுத்து பாத்திமா நகர் பகுதியில் ஓட்டு சேகரித்த அவர் கூறியதாவது: சமூக விரோதிகளின் பிடியிலுள்ள பெண்கள் கழிப்பறையை மீட்டு, நவீன வசதிகளுடன் புனரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவேன். மழை காங்களில் தண்ணீர் புகுந்து விடுவதை தடுக்க, கவுசிகா ஆற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவேன். அதிகாரிகளிடம் பேசி தடுப்பணை கட்டி தருவேன். குப்பை, கழிவுநீர், கொசுக்களை அகற்றி சுகாதரத்திற்கு முன்னுரிமை கொடுப்பேன். ரோடுகள், தெருவிளக்கு அமைக்க நடவடிக்கை எடுப்பேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை