உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 நாட்களாக எரியும் காட்டு தீ; பல ஆயிரம் மரங்கள் சாம்பல்

4 நாட்களாக எரியும் காட்டு தீ; பல ஆயிரம் மரங்கள் சாம்பல்

ஊட்டி: நீலகிரி மாவட்டம், கோரகுந்தா வனப்பகுதியில் விலை உயர்ந்த காட்டு மரங்கள் உள்ளன; வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. கோடை வறட்சியால் கோரகுந்தா வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டன. கடந்த 3ம் தேதி, கோரகுந்தா வனப்பகுதி அருகே உள்ள, கேரளா வனத்தில் பரவிய காட்டு தீ, வராகபள்ளம் வனத்திலிருந்து மேல் நோக்கி பரவி, கோரகுந்தா வனத்தில் பரவியது.கட்டுக்கடங்காத காட்டு தீ பரவலால் காட்டு தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கடந்த 3ம் தேதி பரவிய காட்டு தீ, நான்கு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டு தீயால் வனப்பகுதியில் இருந்த பல ஆயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாயின; வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.கோரகுந்தா வனத்திலிருந்து அப்பர் பவானி, முக்கூர்த்தி வனத்தில் தீ பரவாமல் தடுக்க, வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்