உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கால நிர்ணயம் உள்ளதா உயர் நீதிமன்றம் கேள்வி

கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற கால நிர்ணயம் உள்ளதா உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை,:கோவில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அறநிலையத்துறையிடம் புகார் அளித்தால் விசாரிக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தில் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என கமிஷனர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம் பெருமாள்கோவில்பட்டி கணேசன் உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்த மனு:பெருமாள்கோவில்பட்டியில் கதிர்நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. இது அறநிலையத்துறைக்கு உட்பட்டது. இதற்கு சொந்தமாக அம்பாத்துரையில் 18.32 ஏக்கர் நிலம் உள்ளது. இதை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வீடுகள் அமைத்துள்ளனர். அகற்றக்கோரி கலெக்டர், ஆர்.டி.ஓ., அறநிலையத்துறை உதவி கமிஷனர், ஆத்துார் தாசில்தாருக்கு பலமுறை மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: இவ்வழக்கில் அறநிலையத்துறை கமிஷனரை எதிர்மனுதாரராக இணைத்துக்கொள்ள இந்நீதிமன்றம் தானாக முன்வந்து உத்தரவிடுகிறது. கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அறநிலையத்துறை இணைக் கமிஷனர், உதவி கமிஷனரிடம் புகார் அளித்தால் விசாரிக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற சட்டத்தில் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என ஆக.,27 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி