உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினார் நாகேந்திரன் உறவினர் ஆஜர்

ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் நயினார் நாகேந்திரன் உறவினர் ஆஜர்

தாம்பரம்:நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 4 கோடி ரூபாய் பணம் சிக்கிய விவகாரத்தில், நயினார் நாகேந்திரன் உறவினர் உட்பட மூன்று பேர், தாம்பரம் காவல் நிலையத்தில் நேற்று ஆஜரானார். சென்னையில் இருந்து ஏப்.,6ல், திருநெல்வேலிக்கு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்றபோது, தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சம்மன்

அப்போது, சென்னையை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன்; துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் இருந்து, 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, நெல்லை லோக்சபா தொகுதி பா.ஜ.,வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஹோட்டலில் இருந்து, வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சதிஷ், நவீன் ஆகியோர் ஹோட்டல் ஊழியர்கள்; பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் என கூறப்படுகிறது. இது தொடர்பாக, தாம்பரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரது வழக்கறிஞர் ஆஜராகி, 10 நாட்கள் அவகாசம் கோரி, தாம்பரம் இன்ஸ்பெக்டரிடம் கடிதம் கொடுத்தார். இந்த வழக்கில், நயினார் நாகேந்திரனின் மற்றொரு உறவினரான முருகன், இவரிடம் பணியாற்றும் ஜெய்சக்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

விசாரணை

ஜெய்சங்கர், ஆசைத்தம்பி இருவரும் நேற்று காலை, தாம்பரம் போலீசில் ஆஜராகினர். முருகன் நேற்று மாலை ஆஜரானார். 'ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரையும் தான் ஊருக்கு அனுப்பி வைத்தேன்; ஆனால், பணம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது' என, முருகன் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணை தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ