உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை டமால்: ஓரிரு மாதம் கூட தாக்குபிடிக்காத அவலம்

கொள்ளிடத்தில் புதிய தடுப்பணை டமால்: ஓரிரு மாதம் கூட தாக்குபிடிக்காத அவலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டது. மொத்தம், 850 மீட்டர் நீளத்தில், 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.இந்நிலையில், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுப்பதால், கொள்ளிடம் ஆற்றில் நேற்று, 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரோட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீரோட்டம் அதிகரித்து, தற்போது தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பே, தடுப்பணை எவ்வளவு துாரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும்.இதற்கிடையே, இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் துாண்களும் வெள்ளத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல், சாய்வு நிலைக்கு வந்தது.மின்வாரிய பணியாளர்கள், மின் இணைப்பை துண்டித்து, மின் கசிவு பாதிப்பு ஏற்படாமல் தவிர்த்தனர். எந்த நேரத்திலும், மின் கோபுரம் சாய்ந்து விடலாம் என்பதால், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள நேப்பியர் பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு, சென்னை - திருச்சி நெடுஞ்சாலை பாலத்தை பயன்படுத்தி வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 70 )

Sainathan Veeraraghavan
ஆக 29, 2024 16:20

CORRUPTION EVERY WHERE .. TO SHUT UP THE CRITICISM AND MAKE THE PEOPLE FORGET ABOUT REALITY TAMILNADU GOVT. INVENTS NEW SCHEMES AND GIVE SOPS TO PEOPLE. SIDE BY SIDE PRICES ARE ALSO INCREASED VIZ, ELECTRICITY, MILK, BUS FARE TO BALANCE THE SPENDING. ALREADY TAMILNADU IS HEAVILY INDEBTED AND WHERE THESE SPENDINGS ON SOPS WILL LEAD. ONLY GOD ALONE CAN HELP PEOPLE.


Ramaswamy Jayaraman
ஆக 08, 2024 13:11

யாருக்கு சாமி தெரியும், இப்படி இந்த வருடம் தண்ணி வருமுன்னு. தண்ணியே வராத ஆறு. அதனாலே ஏதோ பேருக்கு ஆணை காட்டியதா கணக்கு காட்டிப்புட்டோம். இப்போ மழை வந்து மானத்தை வாங்குது, எல்லாம் தலை எழுத்து.


Bhaskaran
ஆக 03, 2024 20:47

அணை கட்டிய ஒப்பந்தக்காரருக்கு சிலை வைக்க வேண்டும்


Arumugam
ஆக 03, 2024 19:26

அன்று கரிகாலன் கட்டிய கல்லனை இன்றும் என்றும் தாங்கி நிற்கிறது. இன்று திருட்டு திராவிடீயான்ஸ் கட்டிய தடுப்பனைகளும், பாலங்கலும் ஒரு வெள்ளத்திற்கு கூட தாங்கவில்லை. ஓட்டுக்கு விலைபோகும் குடிகார தமிழர்களை சிந்தியுங்கள்.


KKsamy
ஆக 02, 2024 23:34

இந்த டாஸ்மாக் நாடுதான் இந்தியாவிலே முதன்மை மாநிலம் என்பதையும் நினைவில்கொள்க


Kannan
ஆக 02, 2024 19:39

நீங்கள் கமிசன் வாங்குவதால் மோசமான தரமற்ற பொருட்களை உபயோகிப்பதால் இவ்வாறு நடக்கிறது. சாலை ,குளம்,குட்டை போன்றவற்றில் ஊழல் செய்தல் மக்களின் உயிருக்கு கேடு குறைவு .ஆனால் அணை ,அரசு வீடு , மேம்பாலம் போன்றவற்றில் ஊழல் இருந்தால் மக்களின் உயிருக்கு ஆபத்து . coruption கவர்ன்மென்டை தமிழகத்தில் இருந்து விரட்டுவோம்


KKsamy
ஆக 02, 2024 23:38

சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி போகுதுப்பா சும்மாயில்ல


Barakat Ali
ஆக 02, 2024 17:38

அதே ஆற்றில் மின்கோபுரங்கள் விழுவதும் புதிய டெக்னாலஜி ....... திராவிட மாடல்னா சும்மாவா ????


konanki
ஆக 02, 2024 16:53

திராவிட மாடல் அணை . 90 சதவீதம் கமிஷன் திராவிடியாஸ் க்கு. அணை கட்டுமான செலவு10 சதவீதம். விளைவு அணை டமால்


Ray
ஆக 17, 2024 06:51

பீகாரில் ?????


என்றும் இந்தியன்
ஆக 02, 2024 16:39

திருட்டு திராவிட மாடல் இந்தியா முழுவதும் நாங்கள் கொண்டு செல்வோம் என்று ஸ்டாலின் அன்றே சொன்னார் பார்த்தீர்களா???இது தான் அது ? 2 நாட்கள் முந்தைய செய்தி 13 வது பாலம் உடைந்தது பிஹாரில் கட்டிய ஒரு வருடத்தில்???எங்கும் எதிலும் திருட்டு திராவிடம் ஊடுருவி விட்டது.


இராம தாசன்
ஆக 15, 2024 22:40

எங்கேயாவது பாலம் கட்டி 5 10 வருஷத்துக்கு பின் தான் உடைகிறது .. இங்கே கட்டி மூன்று மாதம் கூட ஆகவில்லை - இதிலும் விடியல் ஆட்சி தான் முதன்மை / முன்னோடி


Indian
ஆக 02, 2024 14:42

நாடு முழுக்க இதே நிலைமை தான் ?? எங்கும் ஊழல் , எதிலும் ஊழல் ..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை