உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு  

பிறப்பு சான்றிதழில் பெயர் சேர்க்க வாய்ப்பு  

சென்னை:''பிறப்பு சான்றிதழில், 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம்,'' என, பிறப்பு, இறப்பு சான்றி தழ் பதிவாளர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனரும், பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவாளருமான செல்வவிநாயகம் கூறியதாவது:குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது சுகாதாரத்துறை வாயிலாக, பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அச்சான்றிதழ்களில், குழந்தை பிறந்த, 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும். அவ்வாறு பெயர் சேர்க்காதவர்கள், வரும் டிசம்பர், 31க்குள் பெயர் சேர்க்க வேண்டும்.மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குனர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால், மாணவர்கள் வாயிலாக பெற்றோருக்கு தகவல் அளித்து, பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, பெற்றோர் மற்றும் பாதுகாப்பாளரின் கையொப்பமிட்ட படிவம் பெற்று பெயர் சேர்க்கலாம். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தாண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை