உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் ஐகோர்ட் கேள்வி

பாடலாசிரியர் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் ஐகோர்ட் கேள்வி

சென்னை:'வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை எனும்போது, பாடலுக்கு பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.இசையமைத்த பாடல்களுக்கான பதிப்புரிமை தனக்கு உள்ளது என்பதால், 4,500க்கும் மேற்பட்ட தன் பாடல்களை பயன்படுத்த, 'எக்கோ ரிக்கார்டிங்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.

உரிமை

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த, ரிக்கார்டிங் நிறுவனங்களுக்கு தடை விதித்திருந்தது.உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி, எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள், மனுக்கள் தாக்கல் செய்தன. தயாரிப்பாளர்களிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு உரிமை இருப்பதாகவும், படங்களின் பதிப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும், மனுக்களில் கூறப்பட்டன.இம்மனுக்கள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன. எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ''இசையமைப்புக்காக, இளையராஜாவுக்கு தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது.''அதனால், தயாரிப்பாளருக்கு அதன் உரிமை சென்று விடும். தயாரிப்பாளர்களிடம் இருந்து, நாங்கள் உரிமை பெற்றுள்ளதால், பாடல்கள் எங்களுக்கு சொந்தமாகி விட்டன,'' என்றார்.இதற்கு, இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ''இசையமைப்பு என்பது அவரது படைப்பாற்றல் சம்பந்தப்பட்டது,'' என்றார்.

கட்டுப்பட்டது

அப்போது நீதிபதிகள், 'அப்படி என்றால், ஒரு பாடல் எப்படி உருவாகிறது. பாடல் வரி, பாடுபவர் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது.'வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை எனும்போது, பாடலாசிரியர் உரிமை கோரினால் என்ன ஆகும்' என, கேள்வி எழுப்பினர்.இதையடுத்து விசாரணையை, ஜூன் இரண்டாம் வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இளையராஜா மேற்கொள்ளும் வணிக பரிவர்த்தனை, இந்த வழக்கின் முடிவுக்கு கட்டுப்பட்டது எனவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
ஏப் 25, 2024 16:38

சரியான குட்டு


Varadarajan Nagarajan
ஏப் 25, 2024 06:47

பாடல்களை எழுதியது பாடலாசிரியர் அதற்க்கு அவர் சம்பளம் பெற்றுக்கொண்டார் அடுத்து இசையமைப்பாளர் சம்பளம் பெற்றுக்கொண்டு இசையமைத்தார் பாடலை திரையிசை பாடகர்கள் சம்பளம் பெற்றுக்கொண்டு பாடுகின்றனர் இவை அனைத்தும் ஒரு திரைப்படத்தில் அமைகின்றது அந்த திரைப்படத்தை ஒருவர் இயக்குகிறார் அதை ஒரு நிறுவனம் தயாரிக்கிறது இப்படி அனைவரும் சம்பளம் பெற்றுக்கொண்டு வேலை செய்யும்போது இசையமைத்தவர்மட்டும் எப்படி காப்புரிமை கோறமுடியும் இதற்க்கு முன்பும் இவர் நல்ல நண்பனாக இருந்த எஸ்பிபி மீதும் இவரது பாடல்களை மேடையில் பாடியதற்காக வழக்கு தொடுத்துள்ளார் இந்த லாஜிக்கப்படி பார்த்தால் ஒரு தொழிற்சாலையில் ஒவ்வொரு பாகத்தையும் ஒரு தொழிலாளி உற்பத்தி செய்து கடைசியில் அது ஒரு முழு பொருளாக வெளிவருகின்றது அப்படியென்றால் தொழிலாளிகள் அதற்க்கு காப்புரிமை கோரா முடியுமா?


Minimole P C
ஏப் 25, 2024 07:42

Raja can claim rights provided he has agreement with the producer who has most rights of a movie he produced Unless IR cannot clim rights All depends on the agreement between the producer and Raja In SPB case, he made money by singing the songs of his hits mostly tuned by IR IR wanted a share out of it for which SPB is not willing Producers who kept mum made the case big In the present case court shall fix a ratio among stake holders to share the commercial benefits A recording company which does nothing cannot simply make records and money unless they have agreement with stake holders In IR case there can be special agreements because of his high demand like Rajini who gets distribution rights apart from salary


Cheran Perumal
ஏப் 25, 2024 03:54

ஒரு படைப்புக்கு ஒருவர் உரிமை கோரினால் அதை உண்டாக்க பயன்பட்டவர்களுக்கும் அதில் உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறுமா? அப்படியென்றால் ஒரு படத்துக்குக்கூட ஒருவர் உரிமை கோரமுடியாதே?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை