உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 5 நாட்கள் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை

5 நாட்கள் வெப்ப அலை: வானிலை மையம் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இன்று(ஏப்.,26) முதல் ஏப்., 30 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏப்.,26 முதல் 30 வரை அடுத்த 5 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 3 -5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 26, 2024 14:37

மாவட்டங்களின் பெயர்களை தெரிவித்தால் செய்தி முழுமையாகவும் அந்த மாவட்ட மக்களும், அந்த மாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்களும் பயன் பெறுவர்


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை