உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை

 டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை

சென்னை: டில்லியில், தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபி, சென்னையில் உள்ள பண்ணை வீடுகளில், தன் கூட்டாளிகளுடன் தங்கி சென்றாரா என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். டில்லி செங்கோட்டை அருகே, கடந்த, 10ம் தேதி பயங்கரவாதி உமர் நபி, காரில் வெடி பொருட்களை எடுத்து சென்று வெடிக்க வைத்தார். இதில், அவரும், அப்பாவிகள், 14 பேரும் பலியாகினர். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்கள், டில்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும், கோவையில், கடந்த 2022ல், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த, கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரித்து வருகின்றனர். இக்குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 17 பேரையும், கேரள சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அசாருதீனையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே பயங்கரவாதி உமர் நபி, அக்டோபரில் சென்னையில் உள்ள பண்ணை வீடுகளில், கூட்டாளிகளுடன் தங்கி சென்றதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் அ டிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றனர். என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய சஹ்ரான் ஹாசிம், சென்னை மண்ணடி மற்றும் கோவைக்கு வந்து சென்றார். 'உமர் நபியும் தன் கூட்டாளிகளுடன் தமிழகம் வந்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசா ரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 19, 2025 07:39

சென்னை மட்டுமல்ல, பெங்களூரு, ஹைதெராபாத் போன்ற மாநிலங்களில் கூட அவர்கள் தங்கியிருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. நான் குறிப்பிட்ட பெங்களூரு, ஹைதெராபாத் போன்ற நகரங்களில் அந்த அமைதிமார்கத்தினர் எங்கெல்லாம் அதிகம் வசிக்கின்றார்களோ, அங்கெல்லாம் பயங்கரவாதிகள் தங்கியிருப்பார்கள். இப்பொழுதும் இருப்பார்கள். சல்லடை போட்டு தேடி அவர்களை பிடித்து என்கவுண்டர் செய்யுங்கள். நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்க உதவிபுரியுங்கள்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை