உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வில் ஐக்கியமாகலாம் பன்னீர்!

தி.மு.க.,வில் ஐக்கியமாகலாம் பன்னீர்!

என். மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பொதுச் செயலர் பதவியிலிருந்து இ.பி.எஸ்., தானாகவே விலகும் வரை, என் தர்மயுத்தம் தொடரும்' என்று, சபதம் செய்திருக்கிறார் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். இ.பி.எஸ்., முறைப்படி பொதுக்குழுவைக் கூட்டித் தான், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆனாரே தவிர, தனக்கு தானே பொதுச்செயலர் என்று பட்டம் சூட்டிக் கொள்ளவில்லை.அவர் பொதுச் செயலர் ஆனதை, தேர்தல் கமிஷனும் அங்கீகரித்து, தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளவும், பழனிசாமிக்கு அனுமதியும் அளித்துள்ளது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பாலானோர், இன்றும் இ.பி.எஸ்.,சை தான் ஆதரிக்கின்றனர்.அ.தி.மு.க., தொண்டர்களில் பெரும்பான்மையோர், அவர் பக்கம் இருக்கின்றனர். அ.ம.மு.க., கட்சியை துவக்கிய தினகரன் பக்கம், எந்த எம்.எல்.ஏ.,வும் செல்லவில்லையே... மேலும், தொண்டர்கள் ஆதரவும், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும் இல்லாமல் தானே தினகரனும், பன்னீர்செல்வமும் இருக்கின்றனர்.இந்த லட்சணத்தில், துணை முதல்வர் பதவி என்ற, 'டம்மி பதவி' தனக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டதாக, பன்னீர்செல்வம் இப்போது கதை விடுகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அமைச்சர்கள் டம்மியாக, ஜீரோக்களாகத் தானே நடத்தப்பட்டனர்?பன்னீர்செல்வம் எத்தனை தர்மயுத்தம் நடத்தினாலும், பழனிசாமி பொதுச்செயலர் பதவியை ராஜினாமா செய்யமாட்டார். மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பன்னீர்செல்வம், எவ்வளவு தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், மீண்டும் அ.தி.மு.க.,வில் பழைய செல்வாக்கை அடைய முடியாது.தர்ம யுத்தம் நடத்துவதற்கு பதிலாக, தி.மு.க.,வில் ஐக்கியமாகி, கருணாநிதியின் புகழ் பாடினால், எம்.எல்.ஏ., பதவியாவது பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Rajagopal
ஜன 08, 2024 19:48

அதிமுகவில் மக்களைக் கவரும் வகையில் ஒரு பிம்பம் இல்லை. எம்ஜியார், ஜெயா பிம்பங்களை வைத்து நிரந்தரமாக ஓட்ட முடியாது. மற்ற தலைமைகள் எல்லாம் சாதி அடிப்படையில் இருப்பவை. இன்னும் கொஞ்ச காலத்தில் பாதி அதிமுக பிரமுகர்கள் திமுகவில், மிஞ்சியிருக்கும் கூட்டம் சிதறி, சசிகலாவிடமும், நாம் தமிழரிடமும், காங்கிரஸிடமும், பாஜகவில் அடைக்கலம் ஆகும். பாஜக மேலே வளர ஆரம்பித்தால், பல சந்தர்ப்பவாதிகள் அங்கே தாவி தங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.


Raja Vardhini
ஜன 08, 2024 16:46

இந்த பன்னீர் மாதிரி ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியை தமிழகம் இதுவரை கண்டதில்லை. பணத்துக்கும், பதவிக்கும் யார் காலை வேண்டுமானாலும் பிடிப்பார்


ramesh
ஜன 08, 2024 18:24

உண்மை தான் .இதை விட மேலாக மேஜைக்கு அடியில் புழு போல தவழ்ந்து வந்து காலில் விழுந்து பதவியை பெற்று விட்டு ,பதவியை அடைந்த உடன் பதவி வழங்கியவரை கட்சு விட்டு நீக்கிய அரசியல் வாதியை இந்த உலகம் கன்னடத்திலை .இவரை பதவிக்காக எந்த புழு வேடமும் எடுப்பார்


duruvasar
ஜன 08, 2024 15:55

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள் ஆசை நிறைவேற வாய்ப்புக்கள் பிரகாசமாக தெரிகிறது.


வெகுளி
ஜன 08, 2024 15:39

பூஜ்யங்களுக்கு நடுவே போட்டி இருக்கலாம்... பொறாமை இருக்கலாம்... வேற என்ன கண்ராவி வேண்டுமானாலும் இருக்கலாம்... ஃபிரீ யா விடுங்க...


Kumar
ஜன 08, 2024 15:14

ஓ பி எஸ் ஒரு துரோகி.இவரின் பித்தலாட்டம் வெற்றி பெறாது


Nagarajan D
ஜன 08, 2024 14:54

இதென்ன பெரிய விஷயம்? எடுபுடி பழனிசாமியே BJP யை எதிர்க்க முடியவில்லை என்றால் dmk வில் ஐக்கியமாக நிறைய வாய்ப்பிருக்கிறது...


aaruthirumalai
ஜன 08, 2024 14:22

சுயநலமாக சிந்திக்க கூடியவர்,


S.L.Narasimman
ஜன 08, 2024 13:54

தர்மயுத்தம் நடத்துவதில் திறமையான ஆளா இருக்ககிறதாலே பன்னீரு திமுகாவீல் சேர்ந்தா ராணுவ அமைச்சராவார்


Gurumurthy Kalyanaraman
ஜன 08, 2024 13:47

தவறில்லை. இப்போது தி.மு.க.வில்தான் பசை இருக்கிறது. பன்னீர் அஙகு சென்று ஓட்டுவதே சிறந்த முடிவு.


Siva Subramaniam
ஜன 08, 2024 13:20

இவர்கள் யாருக்கும் நாட்டை பற்றி அக்கறை இல்லை சொந்த நலமே முக்கியம். கடந்த தேர்தலில் இருந்து எந்த உருப்படியான வேலையும் செய்யவில்லை. மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள் போலும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை