காத்திருந்து... காத்திருந்து....
UPDATED : ஜூலை 04, 2024 | ADDED : ஜூலை 04, 2024
நற்பண்புகளை போதிப்பார்; பிறரிடம் எளிமையாக பழகுவார். ஆனால் கவனக்குறைவாக செயல்படுவார். எதற்கும் அலட்டிக் கொள்ள மாட்டார் ஒரு பெரியவர். இறந்தபின் தனக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என எண்ணி இருந்தார். அவர் வானுலகம் சென்ற போது சொர்க்க வாசல் மூடியிருந்தது. எப்போது திறக்கும் என விசாரித்த போது ஆண்டுக்கு ஒருமுறை திறக்கும் என்றனர். இன்றோடு ஓராண்டு முடிகிறது. கதவு திறக்கட்டும் என அலட்சிய எண்ணத்துடன் சற்று நேரம் உறங்கினார். கண் இமைக்கும் நேரத்தில் கதவு திறந்தது. ஆனால் அவர் வருவதற்குள் கதவு மூடியது. இன்னும் ஓராண்டு ஆகுமே என வருத்தமுடன் காத்திருந்தார்.