உள்ளூர் செய்திகள்

நம்பிக்கையுடன் வாழ்வோம்

* உணவு, உடையை விட்டால் மட்டும் போதாது. மனதிலுள்ள ஆசைகளைத் துறப்பதே உண்மையான துறவு. * குழப்பமற்ற மனதில் தான் அமைதி நிலைபெற்றிருக்கும். அமைதியில் தான் ஆனந்தம் உதயமாகிறது. * துறவு என்பது உறவைச் சுருக்கிக் கொள்வது அல்ல. உலகையே தன் உறவாக்கிக் கொள்வதே துறவு.* கடவுளைச் சரணடைந்து எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழுங்கள். * சூழ்நிலைகள் எப்போதும் விருப்பம் போல் அமைவது இல்லை. அதை சமாளிக்கும் பக்குவம் பெறுங்கள்.- ரமணர்