உள்ளூர் செய்திகள்

கடவுள் அளித்த பரிசு

* பெற்றோர்கள் நல்ல பண்புகளைக் கடைபிடித்து குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். * இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் சோம்பித் திரிவது கூடாது. இளமைக்காலம் மிக அரிய பருவம். அதில் ஒவ்வொரு கணப்பொழுதும் கடவுள் அளித்த பரிசு.* துயரத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை. அவர்களுக்குச் செய்யும் தொண்டினை கடவுள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.* அன்றாட வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள். ஆடம்பரத்தில் சிறிதும் நாட்டம் செலுத்தாதீர்கள்.* இந்த உலகம் உங்களுடைய சேவகனாக இருக்க விரும்பினால், நீங்கள் அழிவின் பாதையில் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள் என்பது பொருள்.* உங்களுடைய கண்களில் தெய்வ அம்சம் நிறைந்துஇருக்கட்டும். அப்போது அனைத்தையும் தெய்வீகமாகக் காணும் மனத் தெளிவு உண்டாகும்.* சோதனைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே ஒருவருக்கு தன்னம்பிக்கையை அளித்து வளர்ச்சிக்கு துணை நிற்கிறது.- சாய்பாபா