குழந்தை போல இருங்கள்!
UPDATED : ஏப் 01, 2014 | ADDED : ஏப் 01, 2014
* தாயை நாடும் குழந்தை போல மனம் எப்போதும் கடவுள் சிந்தனையிலேயே இருக்கட்டும்.* உடல் மட்டும் சேவை செய்தால் போதாது. அதில் மனம் ஒன்றி ஈடுபடுவது அவசியம்.* மனத்தூய்மை இல்லாத பஜனை, பூஜை இரண்டும் பலன் அளிப்பதில்லை.* அதிகாலையிலேயே எழுந்து மனதில் நல்ல எண்ணத்தைப் பரவ விடுங்கள்.* தர்மத்திற்கு சத்தியமே ஆதாரம். சத்தியமும், தர்மமுமே நமது உண்மையான நல்ல நண்பர்கள்.- சாய்பாபா