மனநிறைவு அடையுங்கள்
* பிறரிடம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அன்பு கொண்டு வாழுங்கள். சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு ஆகியவை பக்திக்கு நான்கு கால்கள் போன்றவை. சத்தியத்தை வாக்கிலும், தர்மத்தை செயலிலும் கடைபிடியுங்கள்.* அகிம்சை என்றால் பிற உயிர்களுக்குத் துன்பம் தராமல் வாழ்வது மட்டுமல்ல. அவைகளிடம் அன்பு காட்டியும் வாழ்வதாகும்.* அன்பையும் சத்தியத்தையும் எவனொருவன் கடைபிடிக்கிறானோ அவன் மனதில் சாந்தி நிலவும். அவனிருக்கும் இடமே தெய்வீகமான சூழ்நிலையை உண்டாக்கும். * எவ்வளவுக்கு எவ்வளவு ஆசை நம் மனதை விட்டு அகலுகின்றதோ, அந்த அளவுக்கு மனத்தெளிவு உண்டாகும். சுமை குறைந்தால் பயணம் சுகமாக இருக்கும். இது ரயில் பயணத்திற்கு மட்டுமல்ல. வாழ்க்கை பயணத்திற்கும் தான்.* நாம் இப்போது இருக்கும் நிலையே நல்ல நிலைதான் என்று எண்ணத் தொடங்கினால் வாழ்வில் மனநிறைவும், திருப்தியும் உண்டாகும். அவ்வாறு இல்லாமல் இன்னும் வேண்டும் என்று ஆசையைப் பெருக்கிக் கொண்டே போனால் நிம்மதி தான் தொலைந்து போகும்.-சாய்பாபா