பூரண சரணாகதி
UPDATED : மே 10, 2017 | ADDED : மே 10, 2017
*உணவை தேடுவது மட்டும் வாழ்க்கையல்ல. பக்தி என்னும் நல்ல உணர்வையும் தேடுங்கள்.*கடவுள் நடத்தும் நாடகத்தில் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கிறோம்.*தாயே குழந்தைக்கு தந்தையை அடையாளம் காட்டுகிறாள். அதுபோல வேதம் என்னும் தாய், நமக்கு தந்தையாகிய கடவுளை காட்டுகிறாள்.*கடவுளை பூரணமாக சரணடைந்து விட்டால், விதியின் கட்டளை பயனற்றதாகி விடும்.- சாய்பாபா